Also Watch
Read this
Posted on: May 22, 2025 11:31 AM
By: Srini Vasan

மத்திய அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வடக்கு கர்நாடகா - கோவா கடற்கரைகளுக்கு அப்பால் கிழக்கு மத்திய அரபிக் கடலில் நிலைகொண்டுள்ள மேலடுக்கு சுழற்சியின் தாக்கத்தால், தெற்கு கொங்கன்-கோவா கடற்கரைகளுக்கு அப்பால் கிழக்கு மத்திய அரபிக் கடலில் அதிகாலை 5.30 மணியளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது.
இது வடக்கு நோக்கி நகர்ந்து அடுத்த 36 மணி நேரத்தில் மேலும் தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. மேலும் அடுத்த ஓரிரு நாட்களில் தென்மேற்கு பருவ மழை கேரளாவில் தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved