Also Watch
Read this
By: Web Team

உத்தரப் பிரதேசத்தில் நடந்து சென்று கொண்டிருந்தவரை, தெருவில் சுற்றித் திரிந்த காளை மாடு கொம்பில் முட்டித் தூக்கி, காலால் மிதித்துக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.
உன்னாவ் மாவட்டம் சர்தார் கொட்வாலி பகுதியை சேர்ந்த சுசில் பாஜ்பாய், அதே பகுதியில் உள்ள தனது சகோதரியின் வீட்டிற்கு சென்றுவிட்டு, உறவுக்கார இளைஞர் சுபம் என்பவருடன் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, தெருவில் சுற்றித்திரிந்த காளை, சுசிலை கொம்பால் முட்டித் தூக்கி வீசியது. மேலும், காலால் வயிற்றிலும் தலையிலும் மிதித்ததோடு, தடுக்க முயன்ற சுபத்தையும் தாக்கியது.
இருவரின் அலறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த அக்கம்பக்கத்தினர், காளையை விரட்டிவிட்டு அவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் சிகிச்சை பலனின்றி சுசில் உயிரிழந்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved