Also Watch
Read this
Posted on: Mar 26, 2026 09:33 AM
By: Manigandan Raja

தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு :
பயங்கரவாத அமைப்பான ISIS மற்றும் அல்-கொய்தாவுடன் தொடர்பு உடையதாக குற்றஞ்சாட்டி 12 பேரை ஆந்திர போலீசார் கைது செய்தனர். பீகார், டெல்லி, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைதானவர்களில் 3 பேர் ஆந்திராவை சேர்ந்தவர்கள். தீவிரவாத சித்தாந்தத்தைப் பரப்புவதிலும், தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதிலும் இவர்கள் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved