Also Watch
Read this
By: Manigandan Raja

5 ஆண்டுகளில் 65 மாணவர்கள் தற்கொலை - அபிஜீத்
கடந்த 5 ஆண்டுகளில் ஐ.ஐ.டி. உயர்கல்வி நிறுவனங்களில் 65 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதாக, காக்ரோச் ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் தீப்கே தெரிவித்துள்ளார்.
டெல்லி ஐஐடி மாணவர் ரிஷிகேஷ் உயிரிழப்பு தொடர்பாக பேசிய அவர், நாட்டின் கல்வி முறையை முழுமையாக மாற்றியமைக்க வேண்டும் என்றும், மாணவர்கள் பாதுகாப்புடன் உணரும் சூழலை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பி.நாகேந்திரா
கர்நாடகாவில் அமைச்சர் பதவியை பி.நாகேந்திரா ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அவருக்கு ஆதரவாக ஆதரவாளர்கள் போராட்டம் நடத்திடனர். பல்லாரியில் உள்ள அவரது இல்லம் முன்பு கூடிய ஆதரவாளர்கள், நாகேந்திராவுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர்.

முதல்வரின் நிகழ்ச்சியில் ஆசாதி என முழக்கம்
ஜாதவ்பூர் பல்கலைக்கழக வளாகம் மாவோயிஸ்ட் மற்றும் பாலஸ்தீன ஆதரவாளர்களின் தளமாக இருக்க அரசு அனுமதிக்காது என மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.

ரக்ஷா பந்தன் நிகழ்ச்சியில் பேசிய அவர், ஆசாதி என முழக்கமிடும் மாணவர்களை நாட்டை துண்டு துண்டாகப் பிரிக்க நினைக்கும் கும்பல் என விமர்சித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved