Also Watch
Read this
By: Web Team

மேற்கு வங்க மாநிலம் துர்காபூர் மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் நான்காவது குற்றவாளியை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.இந்த தனியார் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் ஒடிசாவை சேர்ந்த மாணவி கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் சிலரால் இழுத்து செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக நேற்று மூன்று பேரை மேற்கு வங்க போலீசார் கைது செய்து பத்து நாள் கஸ்டடியில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, ஒடிசா மாநில மகளிர் ஆணைய அதிகாரிகள் துர்காபூருக்கு சென்று பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினரை சந்தித்து விசாரணை நடத்தினர்.
மாணவி பாலியல் பலாத்காரம் தொடர்பாக மேற்கு வங்க அரசு எடுத்துள்ள போலீஸ் நடவடிக்கை குறித்தும் அவர்கள் ஒடிசா அரசுக்கு அறிக்கை அளிக்க உள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved