Also Watch
Read this
By: Manigandan Raja

பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உறுதி :
மேற்காசியாவில் நடக்கும் போரால் வளைகுடா நாடுகளில் சிக்கி இருக்கும் இந்தியர்களுக்கு மத்திய அரசு அனைத்து விதாமான பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார வசதிகளை வழங்கும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், நவீன இந்தியா தனது குடிமக்கள் ஆபத்தில் சிக்குவதை அனுமதிக்காது என்றார்.
கேரளாவில் இருந்து லட்சக்கணக்கானோர் வளைகுடா நாடுகளில் வேலை செய்வதை குறிப்பிட்டு பேசிய மோடி, மத்தியில் பாஜக தலைமையிலான என்டிஏ அரசு இருப்பதால், இந்தியா தனது முழு சக்தியையும் பயன்படுத்தி அவர்களை பாதுகாக்கும் என்றார்.
வளைகுடாவில் உள்ள நமது நட்பு நாடுகள் இந்தியர்களுக்கு பாதுகாப்பு அளித்து வருவதாக மோடி கூறினார்.அதே நேரம் மேற்கு ஆசிய விவகாரத்தை கையாளுவதை காங்கிரஸ் கட்சி அரசியலாக்குவதாகவும்,இந்தியர்களுக்கு ஆபத்தை தூண்டும் வகையிலான அறிக்கைகளை வெளியிடுவதாகவும் மோடி குற்றஞ்சாட்டினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved