Also Watch
Read this
Posted on: Jan 10, 2026 01:33 PM
By: Manigandan Raja

ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கு சொந்தமான பகுதி என மத்திய வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது. குறிப்பிட்ட இந்த பகுதியில் சீனா உட்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டு வருவது பற்றி பேசியுள்ள வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு சீனாவுக்கு தாரைவார்க்கப்பட்டதை இந்தியா ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை என்றும், அது முழுக்க முழுக்க இந்தியாவின் பகுதி என்றும் குறிப்பிட்டார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved