சோனியா காந்தி வலியுறுத்தல் : ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தி உள்ளார். கமேனி கொலை விவகாரத்தில் மத்திய அரசு மௌனம் காப்பது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் நம்பகத்தன்மை மற்றும் திசை குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதல் குறித்து கருத்து தெரிவிக்காமல், ஈரானின் பதிலடி தாக்குதலுக்கு மட்டும் கண்டனத்தை தெரிவித்திருப்பது நாட்டின் நடுநிலையான போக்கு அல்ல எனவும், பொறுப்பை தட்டிக் கழிப்பதாகும் எனவும் விமர்சித்துள்ளார். Related Link போர் காரணமாக ஹார்முஸ் நீரிணையை மூடிய ஈரான்