Also Watch
Read this
By: Web Team

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் இறந்தவர்களில் கடைசி நபரின் உடலும் அடையாளம் காணப்பட்டது. இதை அடுத்து விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 260 ஆக உயர்ந்துள்ளது.
கடைசியாக அடையாளம் காணப்பட்ட நபர் குஜராத்தின் கட்ச் பகுதியை சேர்ந்தவர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உருக்குலைந்த உடல்கள் டிஎன்ஏ மரபணு சோதனை மற்றும் முக வடிவமைப்பு மூலம் அடையாளங்காணப்பட்டு விட்டதாக குஜராத் அரசின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
விமான விபத்தில் உயிரிழந்த 260 பேரில் 19 பேர் விமானப் பயணிகள் அல்ல என அகமதாபாத் சிவில் மருத்துவமனை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள் : திருவாடானை அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை குறைவு..
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved