Also Watch
Read this
எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, இதுவரை 36 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கி விட்டு, 198 தொகுதிகளை வைத்துக் கொண்டு, இதர கட்சிகளுடன் திமுக தலைமை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்து ஆனது.

திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழு
டி.ஆர்.பாலு தலைமையிலான, திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழு, கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கூட்டணியில் இருக்கும் வைகோ தலைமையிலான மதிமுகவுக்கு, கடந்த முறையை விட குறைந்த தொகுதிகளை ஒதுக்க திமுக முடிவு எடுத்தது. உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட நிபந்தனை விதிக்கப்பட்டது. இதுகுறித்து வைகோ தலைமையில் நடந்த மதிமுக அவசர உயர்நிலைக் குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. பின்னர் அண்ணா அறிவாலயத்திற்கு வைகோ வந்து சேர, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்து ஆனது.

வைகோவுக்கு நான்கு தொகுதிகள்
திமுக கூட்டணியில், மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. 3 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் தனிச் சின்னத்திலும் போட்டியிட உடன்பாடு ஏற்பட்டது. திமுக உடன் ஒப்பந்தம் ஏற்பட்டதில் மகிழ்ச்சி என, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
திமுக கூட்டணியில் இதுவரை...
* காங்கிரஸ் கட்சிக்கு 28 + ராஜ்யசபா 1 இடம்
* இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - 2
* மனிதநேய மக்கள் கட்சி - 2
* மதிமுக - 4



* தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்ட நிலையில், தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை
* இதுவரை 36 தொகுதிகள் - மீதம் இருப்பது 198 தொகுதிகள்

திமுக கூட்டணியில் இனிமேல்...
தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், மக்கள் நீதி மய்யம், தவாக உள்பட கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு ஒதுக்கீடு செய்யப்படாமல் உள்ளது, பேச்சுவார்த்தை தொடர்கிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved