உத்தரப் பிரதேசம் மாநிலம் கான்பூரில் மதுபோதையில் லம்போர்கினி காரை ஓட்டிச் சென்ற இளைஞர், பாதசாரிகள் மற்றும் பைக் மீது மோதியதில் 6 பேர் காயமடைந்தனர். இதில் பைக் ஒன்று 10 அடி உயரத்தில் தூக்கி வீசப்பட்டது. ஷிவம் மிஸ்ரா என்ற இளைஞர் மதுபோதையில் கான்பூர் விஐபி சாலையில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியோட முயன்ற போது காரை மடக்கி பிடித்த மக்கள் அவனை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். Related Link இந்தியா-கிரீஸ் இடையே பாதுகாப்பு உறவை பலப்படுத்த முயற்சி