வடசென்னை ஆர் கே நகர் தொகுதியில் கொருக்குப்பேட்டை மேம்பாலம் அருமையானது முழுமை பெற்ற நிலையில் அதனை ஆய்வு செய்வதற்காக அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, மேயர் பிரியா ஆகியோர் வந்திருந்தனர். அப்போது செய்தியாளர்கள் தேர்தல் அறிக்கையை திமுக எப்போது வெளியிடும் என கேள்வி எழுப்பினர். கேள்வி கூட கேட்க மாற்றீங்க? அதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.என் நேரு, இங்கே பாருப்பா... இந்த பிரிட்ஜ் சம்பந்தமாக ஏதாவது கேள்வி இருந்தா கேளுங்க அதெல்லாம் தலைமை தலைவர் பார்த்துக்கொள்வார் என பதில் கூறினார். தொடர்ந்து கூட்டணி கட்சிகளிடம் பேச்சு வார்த்தை நடத்த குழு எப்போது அமைக்கப்படும் என கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அதற்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு, உற்சவரும், மூலவருமாய் இருக்கின்ற தமிழக முதல்வர் ஸ்டாலின் அனைத்தையும் பார்த்துக் கொள்வார் என பதிலளித்தார். அப்போது அமைச்சர் கே.என்.நேரு என்னப்பா நீங்க சேகர்பாபுவை பார்த்த கேள்வி கூட கேட்க மாற்றீங்க? நல்லா கேளுங்கப்பா என கூறி சிரிப்பலையை ஏற்படுத்தினார். Related Link சார் நானும் படிக்க வரேன்!