Also Watch
Read this
Posted on: Jan 06, 2026 07:51 AM
By: Web Team
மணல் முறைகேடு, நகராட்சி நிர்வாகத் துறை ஊழல் புகார் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து முறையிட்டார், எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ்.
அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி புகார் குறித்த ஆவணங்களுடன் இபிஎஸ் முறையீடு
தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ், ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் சந்திப்பு
இபிஎஸ் உடன் முன்னாள் அமைச்சர்களும் ஆளுநரை சந்தித்தனர்
திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் குறித்து மனு அளித்துள்ளதாக தகவல்
ஆளுநர் உரையுடன் சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் சந்திப்பு
"திமுக ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி ஊழல்"
நான்கரை ஆண்டு கால திமுக ஆட்சியில், 4 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்று இருப்பதாக இபிஎஸ் குற்றச்சாட்டு
அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் குறித்து கமிஷன் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தல்
திமுக எம்.எல்.ஏ.வின் மருத்துவமனையில் நடைபெற்ற கிட்னி திருட்டு தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என இபிஎஸ் குற்றச்சாட்டு
ஏழைகளின் வறுமையைப் பயன்படுத்தி, பணத்தாசை காண்பித்து கிட்னியை திருடி விட்டதாகவும் புகார்
தேர்தல் தோல்வி பயம் காரணமாகவே, பொங்கல் பரிசாக 3000 ரூபாய் அறிவித்துள்ளது அரசு
இலவச மடிக்கணினிகளை தேர்தல் நேரத்தில் கொடுப்பது ஏன்? என்றும் எடப்பாடி பழனிசாமி கேள்வி
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved