Also Watch
Read this
Posted on: Oct 09, 2025 06:41 AM
By: Web Team

காசாவில் போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக துருக்கி வெளியுறவுத் துறை அமைச்சர் ஹகான் ஃபிடன்(Hakan Fidan) கூறி உள்ளார்.
சிரியா வெளியுறவுத் துறை அமைச்சரை சந்தித்த பிறகு பேசிய ஹகான் பிடன், பேச்சுவார்த்தை நேர்மறையான முடிவை எட்டினால் போர் நிறுத்தம் அறிவிக்கப்படலாம் எனக் கூறினார். போர் நிறுத்தத்தை உறுதி செய்தல், பணயக்கைதிகள் மற்றும் கைதிகளை பரிமாறிக் கொள்வது மற்றும் இஸ்ரேலியப் படைகளைத் திரும்பப் பெறுவது உள்ளிட்டவற்றில் துருக்கி கவனம் செலுத்துவதாகவும் ஃபிடன் கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved