Also Watch
Read this
By: Manigandan Raja

பயணிகளின் வருகை அதிகரிப்பு :
ராம நவமி விடுமுறையொட்டி பயணிகளின் வருகை திடீரென அதிகரித்ததால் மும்பை-புனே விரைவுச்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போர்காட் ((Bhorghat )) பகுதியில் ஐந்து கிலோமீட்டருக்கும் மேலாக வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து நின்றன.
போக்குவரத்து நெரிசலில் சிக்கி பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளான நிலையில், போக்குவரத்து போலீசார் அதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். கடந்த மாதம் இதே சாலையில் கேஸ் டேங்கர் லாரி விபத்து காரணமாக 32 மணி நேர போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved