Also Watch
Read this
By: Web Team

அகமதாபாத் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில், கையில் பாம்புடன் ஏறிய ஒருவர், அதை சக பயணிகளிடம் காட்டி, பணம் கேட்டு மிரட்டியுள்ளார். பாம்பை பார்த்ததும் பதறிய பயணிகள் சிலர், அந்த நபருக்கு பணத்தை கொடுத்துள்ளனர். பயணிகளை அச்சுறுத்தி பணம் பறித்த சம்பவத்தை ரயிலில் இருந்த ஒருவர் வீடியோவாக எடுத்து பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக ரயில்வே நிர்வாகத்திற்கு புகார் சென்றதாகவும் கூறப்படுகிறது.