Also Watch
Read this
By: Web Team

தர்மஸ்தலா வழக்கில் மிகப்பெரிய திருப்பமாக, புகாரளித்தவரையே சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்தனர். தர்மஸ்தலா கோவிலில் இளம்பெண்கள், சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொன்று புதைக்கப்பட்டதாக புகாரளித்த முன்னாள் தூய்மை பணியாளர், தவறான தகவல்களை அளித்து SIT அதிகாரிகளை தவறாக வழிநடத்தியதாக கூறி கைது செய்யப்பட்டார்.
முதலில் புகாரளித்த போது அவர் சமர்பித்த மண்டை ஓடு போலியானது என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து வெள்ளிக்கிழமை இரவு அவரிடம் விடிய விடிய விசாரணை நடத்திய அதிகாரிகள், சனிக்கிழமை காலை 6 மணியளவில் பொய் சாட்சியம் மற்றும் தவறான ஆதாரங்களை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved