Also Watch
Read this
Posted on: May 26, 2025 02:33 AM
By: Srini Vasan

ஐ.பி.எல். தொடரில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து முடிவு எடுக்க இன்னும் 4 முதல் 5 மாதங்கள் வரை இருப்பதாகவும், தற்போது எந்த அவசரமும் இல்லை என்றும் சென்னை அணி கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், கிரிக்கெட் வீரர்கள் அவர்களது செயல்திறனுக்காக ஓய்வு பெறத் தொடங்கினால், சிலர் 22 வயதில் ஓய்வு பெற்று விடுவார்கள் எனவும், தாம் வீட்டிற்கு சென்று சில பைக் ரைடுகளை திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், தான் ஓய்வை குறித்து முடிவெடுக்க இன்னும் அதிக காலம் உள்ளதாகவும், எனவே யோசித்து முடிவெடுப்பதாகவும் கூறியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved