திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகர்கள் வைபவ் மற்றும் ஆதி ஆகியோர் தனித்தனியாக தங்கள் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.தரிசனத்திற்கு பின்னர் தேவஸ்தானம் சார்பில் அவர்களுக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன.இதனை தொடர்ந்து ஆலயத்திற்கு வெளியே வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோருடன் பக்தர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.