Also Watch
Read this
By: Web Team

இது என் நீண்ட நாள் கனவு, பேருந்தில் பயணம் செய்ய வேண்டும் என்ற எனது கனவு இப்போது நிறைவேறியது என முதலமைச்சர் விஜயுடன் அரசு பேருந்தில் பயணித்த ஓட்டுநர் நியூஸ் தமிழ் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார். 
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில், புதிதாக வாங்கப்பட்ட 300 அரசு பேருந்துகளின் சேவையை, முதலமைச்சர் ஜோசப் விஜய் சென்னை தலைமைச் செயலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் அர்சு பேருந்தில் சில்லரை கொடுத்து டிக்கெட் வாங்கிய விஜய், பேருந்தில் சிறிது தூரம் பயணித்தார். அப்போது தனது செல்ஃபோனில் வீடியோ எடுத்த விஜய், ஓட்டுநரையும் தன்னுடம் அமர வைத்து பயணித்தார். முதலமைச்சர் சென்ற பேருந்து தலைமை செயலகத்தில் இருந்து கலங்கரை தூரம் வரை சென்றது.

வழி நெடுகிலும் இருந்த பொதுமக்களுக்கு விஜய், கைசைத்தப்படி அரசு பேருந்தில் பயணித்தார். அவருடன் அரசு அதிகாரிகளும், அமைச்சர் உள்ளிட்டோரும் பயணித்தனர். இதில், காமராஜர் சாலையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்ட பேருந்துகளை முதலமைச்சர் விஜய் பார்வையிட்டபடி சென்றார்.