news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news விவசாயிகளுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளதாக உதயநிதி விமர்சனம்
tv

Also Watch

விவசாயிகளுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளதாக உதயநிதி விமர்சனம்

அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்

4

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே விவசாயிகளுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளதாக உதயநிதி விமர்சித்துள்ளார். வேளாண் நிதி நிலை அறிக்கையில் திட்டங்களுக்கு பெயர்கள் மட்டுமே மாற்றப்பட்டுள்ளதாக சாடி உள்ளார்.

பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது

இதுதொடர்பாக, எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது;
தவெக அரசு வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்தது என்று சொல்வதை விட, முழுக்க முழுக்க முதல்வருக்கு ஜால்ரா அடித்து புகழுரை செய்து, அதாவது மரபுக்கு மீறிய செயல்களை வேளாண்துறை அமைச்சர் சட்டப்பேரவையில் செய்து உள்ளார். திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டத்தை எல்லாம் புது திட்டம் போல் பெயர் மாற்றி, ஒரு வார்த்தையை மட்டும் சேர்த்து அறிவித்து உள்ளனர்.

Related Link
பட்ஜெட் தாக்கல் செய்த அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் பாராட்டு

பட்ஜெட் தாக்கல் செய்த அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் பாராட்டு

உருப்படியாக ஒன்றும் இல்லை
விவசாயிகளுக்கு கடந்த மூன்று மாதங்களாக பல பிரச்சினை இருக்கிறது, விவசாயிகள் தான் அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். வேளாண் பட்ஜெட்டில் உருப்படியாக ஒன்றும் இல்லை. தேர்தலின்போது 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளின் முழு பயிர்க் கடனை தள்ளுபடி செய்வதாக முதல்வர் விஜய் வாக்குறுதி அளித்தார். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், விவசாயிகளை ஏமாற்றி உள்ளார்

முதல்வர் பதில் பேசவில்லை
மேகதாது, காவிரி விவகாரத்தில் தமிழக முதல்வர் கர்நாடகா செல்கிறேன் என்கிறார். அங்குள்ள முதல்வர் வர வேண்டாம் என்கிறார். மேகதாது, காவிரி விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் கடிதம் கொடுத்து உள்ளேன். இதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும். இதற்கும் வழக்கம் போல முதல்வர் பதில் பேசவில்லை.

விவசாயிகளுக்காக கருப்புச்சட்டை
மேகதாது அணை விவகாரம், பயிர்க் கடன் தள்ளுபடியில் ஏற்பட்ட ஏமாற்றம், குறுவை சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் எதிர்கொள்ளும் வேதனை ஆகியவற்றை முன்னிறுத்தி, தவெக ஆட்சியில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் உரிமைக்காக குரல் கொடுக்கும் வகையிலும், அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் கருப்புச் சட்டை அணிந்து வந்து உள்ளோம்.

முதல்வர் பதில் சொல்லட்டும்
காவிரி விவகாரம் குறித்துப் பேச ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வர சபாநாயகரிடம் கடிதம் வழங்கி உள்ளோம். அப்போது விவசாயிகள் பிரச்சினை குறித்த கேள்விகள் கேட்போம். முடிந்தால், தைரியம் இருந்தால் முதல்வர் விஜய் அவையில் வாயை திறந்து பதில் சொல்லட்டும்.
இவ்வாறு எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"டேர் டெவில்" திரைப்படம் படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் தொடங்கும்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved