சர்வதேச டி-20 போட்டியில் குறைவான பந்துகளில் அதாவது ஆயிரத்து 822 பந்தில் 3 ஆயிரம் ரன்களை கடந்து சூர்யகுமார் யாதவ் சாதனை படைத்துள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான டி-20 போட்டியில் விளையாடிய போது அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். இந்த போட்டியில் சூர்யகுமார் யாதவ், 30 பந்துகளில் 63 ரன்களை எடுத்தார். ஐக்கிய அரபு அமீரக வீரர் முஹம்மது வாசிம் ஆயிரத்து 947 பந்துகளில் இந்த மைல்கல்லை எட்டியதே சாதனையாக இருந்தது. அதனை சாதனையை சூர்யகுமார் யாதவ் முறியடித்துள்ளார். Related Link "ஐசிசியை பிசிசிஐயோ, ஜெய்ஷாவோ நடத்தவில்லை"