கூகுள் நிறுவனம் தனது Gemini AI assistant மூலம் பயனர்களின் தனிப்பட்ட தரவுகளை திருடுவதாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கூகுள் பயனர்களின் ஜிமெயில், குறுந்தகவல் முறை மற்றும் வீடியோ கான்பரசிங் தொடர்பான தரவுகளை சட்டவிரோதமாக கூகுள் நிறுவனம் டிராக் செய்வதாக கூறி கலிபோர்னியாவின் சான் ஜோஸ்-ல் உள்ள பெடரல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கலானது. கடந்த காலங்களில் ஜிமெயில், சாட் மற்றும் மீட் செயலிகளுல் தேவை என்றால் செயற்கை நுண்ணறிவை சுவிட்ச் ஆன் செய்யும் வசதி இருந்தது. ஆனால் இப்போது அது பயனர்களுக்கு தெரியாமல் சுவிட்ச் ஆன் செய்யப்பட்டு தனிநபர் தரவுகள் திருடப்படுவதாக வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கலிபோர்னியாவின் தனிநபர் சுதந்திரத்தில் தலையிடுவதை தடுக்கும் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.