புகை மூட்டத்துடன் பற்றி எரிந்த பேருந்து : ஸ்விட்சர்லாந்தில் சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தில் திடீரென பற்றிய தீயில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். 5 பேர்கடுமையான தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர். ஃப்ரிபோர்க் (( Fribourg )) மாகாணத்தின் கெர்சர்ஸ் ((Chiètres)) நகரில்சென்று கொண்டிருந்த பேருந்தில் திடீரென தீ பற்றி எரிந்தது. தகவலறிந்து வந்த மீட்பு குழுவினர் பேருந்தில் சிக்கி தவித்தவர்களை மீட்டு அடர் புகை மூட்டத்துடன் எரிந்த தீயை அணைத்தனர். இருப்பினும் பேருந்து முற்றிலும் எரிந்து சேதமானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. Related Link சீற்றத்தை நிறுத்தாத கிலாவியா எரிமலை