Also Watch
Read this
By: Manigandan Raja

அமெரிக்காவில் டிசம்பரில் ஜி-20 உச்சி மாநாடு
4 ஆண்டுகளுக்கும் மேலாக ரஷ்யா-உக்ரைன் போர் நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்காவில் டிசம்பர் மாதம் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க தயாராக உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விருப்பம் தெரிவித்தார். இருவரும் சந்தித்து போர் நிறுத்தம் குறித்த முடிவுகளை எடுக்கும் சூழல் நிலவும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து ரஷ்யா தாக்குதல்
உக்ரைனின் ஸபோரிஷியா((Zaporizhzhia)), கிரிவி ரிஹ்((Kryvyi Rih)) உள்ளிட்ட பகுதிகளை குறிவைத்து பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ஜெட்-இயந்திர ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி ரஷ்யா நடத்திய தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

உக்ரைனுக்கு ஐரோப்பியப் படைகளை அனுப்புவது மோதலுக்கு வழிவகுக்கும் என்று ரஷ்ய அதிபர் புதின் எச்சரித்ததைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved