Also Watch
Read this
By: Manigandan Raja

ஒரே நாளில் நாடு முழுவதும் 154 காட்டுத்தீ சம்பவங்கள்
அல்ஜீரியாவின் வடகிழக்குப் பகுதிகளில் கடும் வெயிலுக்கு மத்தியில் ஏற்பட்ட காட்டுத்தீயால் 12 பேர் உயிரிழந்த நிலையில் 54 பேர் காயமடைந்துள்ளனர். ஒரே நாளில் நாடு முழுவதும் 154 காட்டுத்தீ சம்பவங்கள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஜிஜெல், பெஜாயா மற்றும் திசி உஸூ மாகாணங்கள் காட்டுத்தீயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
வரலாற்றுச் சிறப்புமிக்க ஹிரோசாகி கோட்டை அதன் பழைய இடத்துக்கே நகர்த்தப்படும் கோட்டை
ஜப்பானின் வடக்குப் பகுதியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஹிரோசாகி கோட்டை மீண்டும் அதன் பழைய இடத்துக்கு நகர்த்தப்பட்டு வருகிறது. சுமார் 400 டன் எடை கொண்ட இந்தக் கோட்டை, கற்சுவர்களை சீரமைப்பதற்காக 2015-ல் 80 மீட்டர் தூரம் இடம் மாற்றப்பட்டது.

தற்போது ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து, தடிமனான கயிறுகளைப் பயன்படுத்தி கோட்டையை மெதுவாக அதன் பழைய இடத்திற்கே இழுத்துச் செல்கின்றனர்.
கீவ் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் தாக்குதல்
உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள தளவாட மையங்களை குறிவைத்து ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்தனர். ரஷ்யா ஏவிய பெரும்பாலான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை தங்களது வான் பாதுகாப்புப் படைகள் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved