Also Watch
Read this
By: Manigandan Raja

கப்பல்களுக்கு அனுமதி வழங்கிய ஈரான் :
மத்திய கிழக்கில் நிலவும் போர் மற்றும் கப்பல் போக்குவரத்துத் தடைகளை முடிவுக்குக் கொண்டுவருமாறு ஐ.நா. வலியுறுத்திய நிலையில், இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளை சேர்ந்த கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்ல ஈரான் அனுமதித்துள்ளது.
இந்தியா, சீனா, ரஷ்யா, ஈராக் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நட்பு நாடுகளைச் சேர்ந்த கப்பல்களுக்கு அனுமதி அளித்துள்ளதாக ஈரானிய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஹோர்முஸ் நீரிணையை திறக்காவிட்டால், எண்ணெய், எரிவாயு மற்றும் உர விநியோகத்தை தடை செய்வதோடு உலகலாவிய பொருளாதார பாதிப்புகளை மோசமாக்கும் என ஐ.நா. எச்சரிக்கை விடுத்தது.
இதனைத் தொடர்ந்து ஈரான் நட்பு நாடுகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved