Also Watch
Read this
By: Manigandan Raja

உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம்
பொதுமக்களுக்கான உள்கட்டமைப்புகள் மீதான அமெரிக்கத் தாக்குதல்களை கடுமையாக கண்டித்த ஈரான் அதிபர் பெஷெஷ்கியன் ஈரானை மிரட்டி சரணடைய வைக்க முடியாது என்று ஆவேசமாக கூறியுள்ளார்.
ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்க முயல்கிறது என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை மறுத்த அவர், அப்படி இருந்தால் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் உறுப்பினராகச் சேர்ந்திருக்க வேண்டிய அவசியம் என்ன என்றார்.
அணுசக்தி விவகாரம் குறித்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கத் தயார் என்ற பெசெஷ்கியன், அமெரிக்காவுடன் உடனடியாக நேரடிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கான வாய்ப்பை நிராகரித்தார்.
உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் ரஷ்யா தாக்குதல்
உக்ரைனின் ஸபோரிஷியா((Zaporizhzhia)), கிரிவி ரிஹ்((Kryvyi Rih)) உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 10 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலில் குடியிருப்பு கட்டடங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புகள் சேதமடைந்தன.

உக்ரைனின் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் நோக்கில், போர்க்கள எல்லைகளையும் தாண்டி ரஷ்யா சுமார் 500 ட்ரோன்களை ஏவியதாக அதிபர் ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved