Also Watch
Read this
Posted on: Nov 12, 2025 02:01 PM
By: Web Team

பூடானில் தமது இரண்டாவது நாள் பயணத்தில், திம்புவில் உள்ள Changlimithang மைதானத்தில் வைத்து நடக்கும் காலசக்கரா அதிகாரமளித்தல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். வாழ்வில் ஞானம் பெற சில குறிப்பிட்ட தியான பயிற்சிகளை செய்யும் திபெத்திய புத்த மத சடங்கே காலசக்கரா என அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடி, பூடான் மன்னர் Jigme Khesar Namgyel Wangchuck உடன் சேர்ந்து பிரார்த்தனைகளில் பங்கேற்றார்.
பூடானில் இந்திய உதவியுடன் கட்டப்பட்ட 1020 மெகாவாட் Punatsangchuu-II நீர் மின் திட்டத்தையும் இருவரும் சேர்ந்து துவக்கி வைத்தனர். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி,மனநல மருத்துவ சேவைகள் மற்றும் பொது சுகாதாரம் தொடர்பான மூன்று ஒப்பந்தங்களும் இரண்டு தலைவர்களின் முன்னிலையில் கையெழுத்தானது. பூடானில் மின்சக்தி திட்டங்களுக்காக இந்தியா நான்காயிரம் கோடி ரூபாயை கடனாகவும் அறிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved