நர்கீஸ் முகமதிக்கு சிறை : ஈரானை சேர்ந்த அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நர்கீஸ் முகமதிக்கு மேலும் 7ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அரசின் அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டிற்காக நர்கீஸ் முகமதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஈரானில் ஹிஜாப் அணியாததால் காவல் துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண் உயிரிழந்த சம்பவத்தையடுத்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. உயிரிழந்த பெண்ணிற்கு ஆதரவாக கடந்த 2ஆம் தேதி சிறையிலிருந்தவாறே நர்கீஸ் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். இதன் காரணமாக சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Related Link முதல் வெற்றியை பதிவு செய்த இலங்கை அணி