குறைந்து மீண்டும் உயர்ந்த எண்ணெய் விலை : ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்க போர் கப்பலின் பாதுகாப்புடன் எண்ணெய் கப்பல் கடந்து சென்றதாக முதலில் தெரிவித்த அமெரிக்கா, அதன் பின்னர் அந்த பதிவை நீக்கி விட்டு, அப்படி எதுவும் நடக்கவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளது. முதலில், எக்ஸ் தளத்தில், சர்வதேச சந்தைக்கு கச்சா எண்ணெயை அனுப்பும் விதமாக அமெரிக்க போர் கப்பல் பாதுகாப்பு வழங்கியதாக பதிவிட்ட எரிசக்தி அமைச்சர் கிறிஸ் ரைட் ((Chris Wright)) பின்னர் அந்த பதிவை நீக்கி விட்டு மறுப்பு தெரிவித்தார். அமெரிக்காவின் இந்த அறிவிப்பால் கச்சா எண்ணெய் விலை முதலில் சரசரவென குறைந்தாலும், அடுத்து வந்த மறுப்பின் காரணமாக மீண்டும் உயர்ந்தது. Related Link எண்ணெய் விநியோக தடையை தொடர்ந்தால் கடும் தாக்குதல்