Also Watch
Read this
By: Web Team

ஈரானின் Natanz அணு ஆராய்ச்சி நிலையத்தின் மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலின் விளைவாக அந்த பகுதியில் கதிரியக்கம் மற்றும் இராசயன மாசு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச அணுசக்திக் கழகம் தெரிவித்துள்ளது.
இந்த அணு ஆய்வு மையம் தாக்கப்பட்டாலும் ஈரானின் இதர பகுதிகளில் கதிரியக்க வீச்சு எதுவும் ஏற்படவில்லை என சர்வதேச அணுசக்தி கழகத்தின் தலைமை இயக்குநர் Rafael Grossi தெரிவித்தார்.
Natanz அணு ஆராய்ச்சி நிலையத்தின் பூமிக்கு அடியில் உள்ள தளத்தில் மட்டுமே அணு ஆயுத கனிம செறிவூட்டும் அமைப்பு உள்ளதாகவும், இஸ்ரேலின் தாக்குதலில் அது பாதிக்கப்படவில்லை எனவும் அவர் கூறினார்.
ஈரானின் அணு ஆராய்ச்சி நிலையத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலின் விளைவுகள் குறித்து சர்வதேச அணுசக்தி கழகத்தில் உறுப்பினர்களாக உள்ள 15 நாடுகள் கவுன்சிலில் அவர் இதை தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved