Also Watch
Read this
By: Web Team

ஈரானுக்கு எதிரான தாக்குதல் திட்டங்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தனிப்பட்ட முறையில் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஈரான் அணுசக்தி தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை பொறுத்தே டிரம்ப் இறுதி உத்தரவை அளிப்பார் என்றும் கூறப்படுகிறது. ஈரான் அணுசக்தி தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்காவும் அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள டிரம்ப் வரும் வாரம் மிக முக்கியமானது என்றும் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் நடத்தாமலும் இருக்கலாம் என கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள் : செல்பிக்காக விபூதியை அழித்த திருமாவளவன்..
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved