Also Watch
Read this
By: Web Team

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் தீவிரமடைந்திருக்கும் சூழலில், மத்திய கிழக்கு பகுதிக்கு அதிக போர் விமானங்களை அமெரிக்கா அனுப்பியுள்ளது.
ஈரான் மற்றும் அதற்கு ஆதரவான படைகளிடம் இருந்து மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க படைகளை பாதுகாக்க தற்காப்பு நடவடிக்கையாக போர் விமானங்கள் அனுப்பப்பட்டு வருவதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் தெரிவித்தார்.
வான் பாதுகாப்பு அமைப்புகள், போர் விமானங்கள், எதிரி ஏவுகணைகளை கண்டறிந்து சுட்டு வீழ்த்தக்கூடிய போர் கப்பல்கள் உள்ளிட்ட சுமார் 40 ஆயிரம் துருப்புகளை மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்கா ஏற்கனவே நிலை நிறுத்தியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved