உலகம்

வாஷிங்டனில் இந்திய வம்சாவளி நபர் தாக்கப்பட்டு கொலை

வாஷிங்டனில் இந்திய வம்சாவளி நபர்  தாக்கப்பட்டு கொலை

 

அமெரிக்காவின் வாஷிங்டன் புறநகரில், உணவகம் ஒன்றிற்கு வெளியே நடந்த மோதலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 41 வயது விவேக் சந்தர் தனேஜா என்பவர் கொல்லப்பட்டார். அவர் கடுமையாக தாக்கப்பட்டு இரத்தம் வழிய உயிருக்கு ஆபத்தான நிலையில் அங்கு கிடந்த அவரை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தாலும் காப்பாற்ற முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. விர்ஜீனியாவில் எக்ஸ்கியூடிவ் ஆக வேலை பார்த்து வந்த தனேஜாவின் இறப்பு குறித்து கொலைவழக்கை போலீசார் பதிவு செய்துள்ளனர். கொலையாளி குறித்த தகவல் தருபவர்களுக்கு 25 ஆயிரம் டாலர் வெகுமதி அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மட்டும் இதுவரை பல இந்திய மாணவர்களும், பணியாளர்களும் சந்தேகத்திற்கிடமான வகையில் அமெரிக்காவில் மரணமடைந்தனர்.

00 Comments

Leave a comment