அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இண்டியானா மாநிலத்தில் உள்ள Purdue பல்கலைகழகத்தில் ஆராய்ச்சி படிப்பு படிப்பு வந்த 23 வயது மாணவர் சமீர் காமத், கடந்த 5ஆம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். உடற்கூராய்வு அறிக்கை மற்றும் முதற்கட்ட விசாரணையின் படி அவர் தன்னைத்தானே தலையில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. பி.ஹெச்.டி படிப்பு முடிவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் சமீர் காமத் தற்கொலை செய்து கொண்டார். அமெரிக்காவில் சமீப காலமாக இந்தியா மாணவர்கள் தொடர்ச்சியாக உயிரிழந்து வருவது குறிப்பிடத்தக்கது.
உலகம்
00 Comments
Leave a comment