உலகம்

சூப்பர் பவுல் வெற்றி பேரணியில் மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு

சூப்பர் பவுல் வெற்றி பேரணியில் மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு

 

அமெரிக்காவின் கன்சாஸ் நகரில் நடைபெற்ற சூப்பர் பவுல் வெற்றி பேரணியில், மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானார். மேலும் 11 குழந்தைகள் உட்பட 21 பேர் காயமடைந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 8 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்க உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. அமெரிக்காவில் மிகவும் புகழ்பெற்ற சூப்பர் பவுல் ரக்பி போட்டியில், கலிபோன்ரியா அணியை வீழ்த்தி கன்சாஸ் சிட்டி அணி வெற்றி வாகை சூடியது. அதனை கொண்டாடும் வகையில் கன்சாஸ் நகரில் நடைபெற்ற பிரம்மாண்ட பேரணியில், லட்சக்கணக்கான ரசிகர்கள் பங்கேற்றனர். அப்போது மர்மநபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதால் மக்கள் சிதறி ஓடினர்.

00 Comments

Leave a comment