நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த தேவூரில் செல்லமுத்து மாரியம்மன் கோவிலின் சித்திரை திருவிழாவை முன்னிட்டு காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். கடந்த ஏப்ரல் 14 அன்று பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கி, தினமும் அம்மன் வீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான பால்குட ஊர்வலத்தை முன்னிட்டு விரதமிருந்த பக்தர்கள் அலகு குத்தி மயில் காவடி, பால் காவடி எடுத்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வந்த பால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
தமிழ்நாடு
00 Comments
Leave a comment