ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் ஆலோசகராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட கூடும் என கூறப்படுகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் உலகக்கோப்பை தொடருடன் நிறைவடைந்தது.
இதையடுத்து, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ராகுல் டிராவிட் விலகினார். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக விவிஎஸ் லட்சுமணன் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ஓய்வு பெறும் ராகுல் டிராவிட் வரும் ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகராக செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
00 Comments
Leave a comment