தமிழ்நாடு

மாணவிகளை திட்டி பிரம்பால் ஆக்ரோஷமாக தாக்கிய ஆசிரியை.. வலியில் துடித்த மாணவிகள் | vellore teacher

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே வீட்டுப்பாடம் எழுதாததால் ஆசிரியை பிரம்பால் தாக்கியதாக கூறி, மருத்துவமனையில் 3 மாணவிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலவம்பாடியில் செயல்படும் அரசு பள்ளியில் பணியாற்றி வரும் ஆங்கில ஆசிரியை தீபலட்சுமி, 7-ஆம் வகுப்பு மாணவிகள் சரிவர வீட்டுப்பாடம் எழுதாததால் அவர்களை கடுமையான வார்த்தைகளால் திட்டியும், பிரம்பால் ஆக்ரோஷமாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் 3 மாணவிகளுக்கு தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

00 Comments

Leave a comment