தமிழ்நாடு

வழக்கறிஞர் வீட்டின் மீது நள்ளிரவு பெட்ரோல் குண்டு வீச்சு

வழக்கறிஞர் வீட்டின் மீது நள்ளிரவு பெட்ரோல் குண்டு வீச்சு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ரேஷன் அரிசி கடத்தல் குறித்து தட்டிக்கேட்ட வழக்கறிஞர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசி சென்ற மர்மகும்பலின் சிசிவிடி காட்சி வெளியாகி உள்ளது. கோவில்பட்டி ராஜு நகரை சேர்ந்த சிறுவன் ஒருவனை ரேஷன் அரிசி கடத்தல் கும்பல் ஒன்று மிரட்டி ரேஷன் அரிசி வாங்கி தரச்சொல்லியது குறித்து அதே பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் மாரிச்செல்வம் தட்டி கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கும்பல் நள்ளிரவில் மாரிச்செல்வன் வீட்டின் மீது பெட்ரோல் கொண்டு வீசியதோடு, வீட்டின் முன் நிறுத்தியிருந்த வாகனத்தையும் அடித்து நொறுக்கி சென்றுள்ளனர். மேலும் தோட்டத்திலிருந்த வாகனத்திற்கும் தீ வைத்து எரித்தாக கூறப்படுகிறது. இந்த தாக்குதிலில் வீட்டின் முன் பகுதியிலிருந்த பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது.


 

00 Comments

Leave a comment