தமிழ்நாடு

தனியார் ஆம்னி பேருந்து மற்றும் லாரி விபத்து.!

தனியார் ஆம்னி பேருந்து மற்றும் லாரி விபத்து.!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே தனியார் ஆம்னி பேருந்து மற்றும் லாரிக்கு நடுவே சிக்கி சுற்றுலா வேன் விபத்துக்குள்ளானதில், வேன் ஓட்டுநர் உட்பட 7 பேர் காயமடைந்தனர். கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 14 பேர் கோடை விடுமுறைக்காக ஊட்டி சென்று விட்டு மீண்டும் வேனில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாழப்பாடி அருகே வந்த போது, முன்னால் சென்ற லாரியின் ஓட்டுநர் வேகத்தை குறைத்ததால் வேன் ஓட்டுநரும் வேகத்தை குறைத்துள்ளார். அப்போது பின்னால் அதிவேகமாக வந்த தனியார் ஆம்னி பேருந்து வேன் மீது மோதவே, அது முன்னால் சென்ற லாரி மீது மோதியது. இரு வாகனங்களுக்கு இடையே சிக்கிய வேன் நொறுங்கியது.

00 Comments

Leave a comment