தமிழ்நாடு

தூத்துக்குடி - மதுரை இணைப்பு சாலையில் போக்குவரத்து நெரிசல்

தூத்துக்குடி - மதுரை இணைப்பு சாலையில் போக்குவரத்து நெரிசல்

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி எதிரே ஆமை வேகத்தில் நடைபெறும் மேம்பால பணியால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், காவலர்கள் யாரும் இல்லாததால் தனிநபர் ஒருவர் போக்குவரத்தை சீர் செய்தார். இதையடுத்து 3 மணி நேரமாக ஸ்தம்பித்து நின்ற வாகனங்கள் புறப்பட்டு சென்றன.தூத்துக்குடி
துறைமுகம் அருகே மதுரை இணைப்பு சாலையில் உள்ள மேம்பாலம் நகரின் முக்கிய சந்திப்பாக இருந்து வருகிறது. காவலர்கள் அனைவரும் அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வின் பாதுகாப்பு பணிக்காக மதுரை சென்று விட்டதால், அங்கு போக்குவரத்தை சீர் செய்ய யாரும் இல்லை என கூறப்படுகிறது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
 

00 Comments

Leave a comment