தமிழ்நாடு

AKDR பள்ளி 10ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை

AKDR பள்ளி 10ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை

 

ராஜபாளையத்தில் ஆசிரியர் கண்டித்ததால் பத்தாம் வகுப்பு மாணவன் மனம் உடைந்து தூக்கிட்டு தற்கொலை!
ராஜபாளையம். சரியாகப் படிக்கவில்லை எனக்கூறி ஆசிரியர் சக மாணவர்கள் முன்பு கண்டித்ததால் பத்தாம் வகுப்பு மாணவர் ஶ்ரீலயம் என்பவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இறந்த ஸ்ரீலயத்தின் உடலைக் கண்டு தாய் தந்தையர் ஒட்டிப்பிறந்த உடன் பிறந்த சகோதரி கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் லட்சுமியாபுரம் தெருவை சேர்ந்தவர்
போத்தி. இவரது மனைவி தமிழரசி இவர்களுக்கு ஶ்ரீ லயம்(16), ஶ்ரீ நித்யா(16) என்ற ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகளும் மகரிஷி(8) என்ற மகனும் உள்ளனர்.
ஶ்ரீ லயம் ராஜபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.
மாணவர் ஶ்ரீ லயத்திற்க்கு படிப்பு சரிவர ஏறவில்லை.இதன் காரணமாக அறிவியல் பாடத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்து வந்துள்ளான்.
இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் பள்ளி சென்ற ஶ்ரீலயம் மதியம் அறிவியல் பாடப் பிரிவில் வகுப்பு தேர்வு நடைபெற்றுள்ளது.
சரியாக படிக்காததால் தேர்வு எழுத முடியாமல் திணறிய நிலையில் இருந்த மாணவனை அறிவியல் ஆசிரியர் மரிச்சாமி என்பவர் சக மாணவர்கள் முன்னிலையில் பிரம்பால் அடித்து அவரை கண்டித்துள்ளார்.
இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த மாணவனை நண்பர்கள் சமாதானம் செய்ய முயற்சித்துள்ளனர்.
முயற்சி பழனிக்காமல் மேலும் மனமடைந்த நிலையிலேயே வகுப்பறையில் இருந்து வந்த ஸ்ரீலயம் பள்ளி முடிந்த பிறகு சக நண்பர்கள் மற்றும் மாணவர்களிடம் எதுவும் பேசாமல் வீட்டிற்கு சென்றுள்ளான்.
பள்ளி முடிந்து மாலை வீட்டிற்கு வந்தவர் வீட்டின் முன்பு சைக்கிளை நிறுத்திவிட்டு வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்.
வெளியே சென்ற ஶ்ரீலயம் நெடு நேரமாகியும் வீட்டிற்கு வராததால் பெற்றோர்கள் அவரது நண்பர்களுக்கு தொடர்பு கொண்டு விசாரித்துள்ளனர்.
அது சமயம் உடன்படித்த சக மாணவர்கள் ஸ்ரீலயம் சரிவர படிக்காமல் இருந்ததனால் ஆசிரியர் இன்று கண்டித்ததையும் கூறியுள்ளனர்.
இதனை அறிந்த பெற்றோர்கள் மற்றும் உடன் படித்த மாணவர்கள் ஶ்ரீலயத்தை தேட ஆரம்பித்துள்ளனர்.
வெகு நேர தேர்தலுக்குப் பின்னும் மாணவன் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் வீட்டிற்கு திரும்பி வந்த நிலையில் சந்தேகத்தின் பெயரில் வீட்டின் அருகே உள்ள அவருக்கு சொந்தமான ஸ்டோர் ரூமாக பயன்படுத்தி வரும் மற்றொரு வீட்டிற்கு சென்று பார்த்த பொழுது வீட்டினுள் உள்பக்கமாக பூட்டப்பட்டு தூக்கிட்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள்.
உடனடியாக கதவை உடைத்து அவரை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவர் ஶ்ரீ லயம் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
சக மாணவர்கள் மத்தியில் ஆசிரியர் கண்டித்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட ஶ்ரீ லயத்தின் உடலைக் கண்டு பெற்றோர்கள் கதறி அழுததும்
பிறக்கும் போதே ஒட்டிப்பிறந்த சகோதரன் உடல் அசைவற்று உயிரிழந்த நிலையில் சடலமாக கிடப்பதைக் கண்ட உடன் பிறந்த சகோதரி மற்றும் சகோதரன் கதறி அழுதது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் மாணவனின் தந்தை மாணவனின் கல்வி நிலை குறித்து வீட்டிற்கு தெரியப்படுத்தாமல் பிரம்பால் அடித்து சக மாணவர்கள் முன்னிலையில் காயப்படுத்திய ஆசிரியர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் இது குறித்த தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் தனியார் மருத்துவமனையில் இருந்து மாணவன் உடலை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.
அறிவியல் ஆசிரியர் மாரிசாமி தலைமறைவு போலீஸ் தேடி வருகின்றனர்

00 Comments

Leave a comment