சுதந்திர தினத்தை முன்னிட்டு 3 மணி நேரம் இடைவிடாது சிலம்பம் சுற்றி திருச்சியில் வீரர்கள், வீராங்கனைகள் சாதனை படைத்துள்ளனர். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்தை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்தில் உலக சிலம்ப இளையோர் சம்மேளனம் சார்பில் சிலம்பத்தில் உலக சாதனை நிகழ்த்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. கி.ஆ.பெ விஸ்வநாதம் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் ஒன்றிணைந்து இரட்டை சிலம்பம் சுற்றி உலக சாதனை நிகழ்த்தினர். இதனை துபாய் ஐன்ஸ்டீன் உலக சாதனை புத்தகம் மற்றும் கனடா கிட்ஸ் உலக சாதனை நிர்வாகிகள் அங்கீகரித்து சிலம்ப வீரர்களை பாராட்டினர்.
தமிழ்நாடு
00 Comments
Leave a comment