Also Watch
Read this
By: Manigandan Raja

வெள்ள பாதிப்புகளில் உயிர்பிழைத்தவர்கள் மீட்பு
நேபாள வெள்ள பாதிப்புகளில் இருந்து மீட்புப் பணியாளர்கள் உயிர் பிழைத்தவர்களைத் தேடியபோது, மூதாட்டி ஒருவர் JCB இயந்திரத்தின் உதவியுடன் பாதுகாப்பாக மீட்கப்பட்ட காட்சி வெளியாகியுள்ளது.
மற்றொருபுறம், வெள்ள பாதிப்புகளில் இருந்து மீட்கப்பட்ட இரட்டைக் குழந்தைகளை நேபாள ராணுவ வீரர்கள் அரவணைத்து ஆறுதல் கூறிய காட்சிகள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
சீனா - நேபாள எல்லையில் 2ம் கட்ட வெள்ள அபாயம்
சீனா - நேபாள எல்லையில் CHHOCHEN KHOLA மற்றும் PUREPU TSANGPO ஆறுகள் இணையும் இடத்தில், நிலச்சரிவு காரணமாக ராட்சத தடுப்பு ஏரி திடீரென உருவாகி நிரம்பி வழிவதாக சீன அரசு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த 72 மணி நேரத்திற்குள் இந்த இயற்கை அணை உடைந்து, 2ம் கட்ட வெள்ளப் பெருக்கு ஏற்படும் ஆபத்து உள்ளதாக தெரிவித்துள்ளது.

மக்கா கடிகார கோபுரத்தின் உச்சியை தாக்கிய மின்னல்
சவுதி அரேபியாவின் மக்கா நகரத்தில் கடுமையான வானிலை நிலவிய போது, பிரபலமான மக்கா கடிகார கோபுரத்தின் உச்சியை சக்திவாய்ந்த மின்னல் தாக்கிய காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளன.

கனமழை மற்றும் தொடர் மின்னல் தாக்குதல்களுக்கு மத்தியில், கோபுரத்தின் உச்சிப் பகுதியில் மின்னல் பாய்ந்த தருணம் சினிமா காட்சி போல் இருந்ததாக இணைய வாசிகள் கருத்து கூறி வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved