Also Watch
Read this
By: Web Team

சென்னை தண்டையார்பேட்டையில் போதை மாத்திரை விற்பனை செய்து வந்த ரவுடியை, போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். சென்னை கண்ணகி நகரை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான தினேஷ் என்கிற சுனாமி தினேஷ், போலீசாரின் கெடுபிடியால் தனது வீட்டை காலி செய்து விட்டு தண்டையார்பேட்டையை சேர்ந்த வைஷ்ணவி என்பவருடன் ஏற்பட்ட தொடர்பால், அவருடனேயே வசிக்க துவங்கியதோடு அங்கிருந்தே போதை மாத்திரை விற்பனையிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இது தொடர்பாக கிடைத்த தகவலின் பேரில் அந்த வீட்டில் சோதனை செய்த ஆர்.கே.நகர் போலீசார், தடை செய்யப்பட்ட 400க்கும் மேற்பட்ட போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்ததை கண்டுபிடித்தனர்.