Also Watch
Read this
By: Web Team

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடற்கரையில் ஒதுங்கிய வெள்ளை கற்சிலையை அப்பகுதி இளைஞர்கள் மீட்டனர்.
பூம்புகார் கடல்பகுதியில் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் குளித்து கொண்டிருந்தனர்.
அப்போது, கடற்கரையில் சிதலமடைந்த நிலையில், கரை ஒதுங்கியிருந்த வெள்ளை கற்சிலையை பார்த்து ஆச்சரியம் அடைந்தனர்.
4 அடி உயரமுள்ள சிலையை கயிறு கட்டி மீட்ட அவர்கள், அதனை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.