Also Watch
Read this
By: Manigandan Raja

சேலம் மாநகரம், கொண்டலாம்பட்டி காவல் எல்லைக்குட்பட்ட பெரிய புத்தூர் அக்ரஹாரம் பகுதியில், பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று, குழந்தை இல்லாத தம்பதிக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் குழந்தைகள் நல அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இத்தகவலின் பேரில், கொண்டலாம்பட்டி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பின்வரும் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன பெரிய புத்தூர் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த கவிதா (25) - சீனிவாசன்
தம்பதியருக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 17.06.2026 அன்று பூலாவரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கவிதாவிற்கு நான்காவதாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.
வறுமை அல்லது வேறு காரணங்களால் இக்குழந்தையை விற்க அவர்கள் முடிவு செய்ததாகத் தெரிகிறது. ரூ. 2 லட்சத்திற்கு பேரம் இதனைப் பயன்படுத்திக் கொண்ட ராக்கியப்பட்டியைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் இடைத்தரகராகச் செயல்பட்டுள்ளார்.

இராமநாதபுரம் மாவட்டம், காஞ்சிரங்குடியைச் சேர்ந்த குழந்தை இல்லாத தம்பதியான முத்துலட்சுமி (45) - இந்திரகுமார் ஆகியோருக்கு இக்குழந்தையை விற்க பேரம் பேசப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 24.06.2026 அன்று உத்தமசோழபுரம் கரபுநாதர் கோயில் அருகே வைத்து, ரூ. 1,50,000/- (ஒன்றரை லட்சம்) பணத்தைப் பெற்றுக்கொண்டு, பிறந்த ஒரு வாரமே ஆன அக்குழந்தையை முத்துலட்சுமி தம்பதியிடம் ராமமூர்த்தி ஒப்படைத்துள்ளார்.
குழந்தை மீட்பு மற்றும் கைது நடவடிக்கை உண்மை நிலவரத்தை அறிந்த காவல்துறையினர், குழந்தைகள் நலக் குழுவின் (CWC) அறிவுறுத்தலின்படி, அக்குழந்தையை பத்திரமாக மீட்டனர். பாதுகாப்பு கருதி மீட்கப்பட்ட பெண் குழந்தை சின்னத்திருப்பதியில் உள்ள லைஃப்லைன் அறக்கட்டளையில் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து குழந்தைகள் நல அலுவலர் அளித்த புகாரின் பேரில், கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சட்டவிரோத குழந்தை
ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பியுள்ளனர். மேலும், இந்த சட்டவிரோத குழந்தை விற்பனை கும்பலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா, இதற்கு முன்பும் இதுபோன்ற சம்பவங்களில் இவர்கள் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்து கொண்டலாம்பட்டி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.