Also Watch
Read this
By: Manigandan Raja

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தெற்கு திட்டங்குளத்தைச் சேர்ந்தர் அனிதா (24), ஓட்டப்பிடாரம் தாலுகா ஓசனூத்தைச் சேர்ந்தர் சுரேஷ் (29). வெளிநாட்டில் வேலை செய்து வரும் சுரேஷுக்கும் அனிதாவிற்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது.
இருவரும் இன்று மாலை கயத்தாறு அருகே உள்ள கழுகுமலை அருள்மிகு கழுகாசலமூர்த்தி கோயிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளனர் பின்னர் மலை உச்சியில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயிலுக்கு சென்ற தம்பதியினர், கையில் வைத்திருந்த பழங்களை குரங்குகளுக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.